Monday, August 10, 2009
Monday, August 3, 2009
Friday, July 31, 2009
வியாபார காட்சியகத்தின் வடிவமைப்பு
எம்மால் வடிவமைக்கப்பட்ட ஒரு வாணிப காட்சியகத்தின் அமைப்பினையே கீழ்க்காட்டப்பட்டுள்ள படங்களில் காண்கின்றீர்கள்.


வடிவமைப்புக்கு முன்னர் காட்சியகத்தின் தோற்றம்
வடிவமைப்புக்கு பின்னர் காட்சியகத்தின் தோற்றம்
முழுமையாக ஒரு வியாபார ஸ்தாபனத்தினை எவ்வாறான விளம்பரங்களையும், எவ்வாறான வர்ணங்களையும், பூசுவதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரமுடியும் என எமது நிறுவனம் ஆலோசனைகளையும் அதற்கான வடிமைப்புக்களையும் வழங்கி வருகின்றது. எந்த ஒரு கட்டிடத்தினையும் அதன் தோற்றத்திற்கேற்ப பல வருட அனுபவம் மிக்க வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் உருவாக்கிக் கொடுக்கின்றோம்.
Wednesday, July 29, 2009
பட்டமளிப்பு விழா அல்பம்
எம்மால் அண்மையில் தயாரிக்கப்பட்ட பட்டமளிப்பு விழா அல்பம் ஒன்றின் பக்கங்கள். எனது பல்கலைக்கழக நண்பன் எஸ். ஜெகநாதன் தற்போது லண்டன் கோவென்றி கல்லூரியில் (Coventry University - UK) நிதியியல் விஞ்ஞான முதுமானிமானி பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், மேலும் அவர் பல்வேறு துறைகளில் முன்னேறி வாழ்க்கையில் வெற்றபெற இறையருள் கூட இருக்கட்டும்.
இனி எமது வடிவமைப்புக்குள் வருவோம். பதிப்புத்துறையினை நவீன தொழில்நுட்பங்கள் ஆக்கிரமிக்கத்தொடங்கியவுடன் அதன் தரமும் அழகும் நன்கு பட்டைதீட்டப்பட்டுவிட்டன. அந்தவகையில் மென்பொருளின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் அல்பத்தின் பக்கங்களே இவை. இத்தகைய அல்பங்கள் தயாரிப்புக்கு சற்று அதிகளவான பணம் செலவு ஏற்பட்டாலும் அதன் அழகும் உறுதித் தன்மையும் பலதரப்பட்டவர்களையும் கவருகின்றது.
இனி எமது வடிவமைப்புக்குள் வருவோம். பதிப்புத்துறையினை நவீன தொழில்நுட்பங்கள் ஆக்கிரமிக்கத்தொடங்கியவுடன் அதன் தரமும் அழகும் நன்கு பட்டைதீட்டப்பட்டுவிட்டன. அந்தவகையில் மென்பொருளின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் அல்பத்தின் பக்கங்களே இவை. இத்தகைய அல்பங்கள் தயாரிப்புக்கு சற்று அதிகளவான பணம் செலவு ஏற்பட்டாலும் அதன் அழகும் உறுதித் தன்மையும் பலதரப்பட்டவர்களையும் கவருகின்றது.Tuesday, June 16, 2009
என்னைப் பற்றி ஒரு சிறு குறிப்பு
அன்பு வணக்கங்களுடன் நிசா!
ஓவியன், யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள மட்டுவில் என்னும் சிற்றூரைச் சேர்ந்வன். ஓவியக்கலை இறைவன் எனக்கு விஷேசமாகக் கொடுத்த பொக்கிஷம். ஒன்பது வயது முதல் தூரிகை பிடித்த விரல்கள் என்னுடையவை. எனக்குக் கிடைத்த வளங்களின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையினால் எனது திறமைகளும் ஒரு வரையறைக்குள் aஅடங்கிக்கொண்டன. முடிந்தவரை முயன்றிருக்கின்றேன், முயன்றதை அடைந்திருக்கின்றேன், அந்த வகையிலான ஒரு முயற்சிதான் இதுவும் என எண்ணுகின்றேன்.

ஓவியன், யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள மட்டுவில் என்னும் சிற்றூரைச் சேர்ந்வன். ஓவியக்கலை இறைவன் எனக்கு விஷேசமாகக் கொடுத்த பொக்கிஷம். ஒன்பது வயது முதல் தூரிகை பிடித்த விரல்கள் என்னுடையவை. எனக்குக் கிடைத்த வளங்களின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையினால் எனது திறமைகளும் ஒரு வரையறைக்குள் aஅடங்கிக்கொண்டன. முடிந்தவரை முயன்றிருக்கின்றேன், முயன்றதை அடைந்திருக்கின்றேன், அந்த வகையிலான ஒரு முயற்சிதான் இதுவும் என எண்ணுகின்றேன்.

1999 ஆம் ஆண்டு வட்டக்கச்சி கல்மடு விநாயகர் ஆலயத்தில் என்னால் வரையப்பட்ட முகப்பு ஓவியம்
எனது அனுபவங்களின் மூலமாக நான் பெற்றுக்கொண்ட நுட்பங்களினையும் சில படிமுறைகளினையும் எனது பதிவுகளில் பதிவிடுகின்றேன். அவை உங்களைக் கவர்ந்தால் அல்லது ஏதோ ஒருவகையில் உங்களுக்கு உதவியாக இருந்தால் என்னை மென் மேலும் எழுதத் தூண்டும் என எண்ணுகிறேன். கணினி வடிவமைப்பு சம்பந்தமாக எந்தவொரு மென்பொருளாயினும் சரி (Adobe Photoshop, Adobe Indesign, Adobe Illustrator, Adobe Pagemaker, Corel Draw, QuarkXpress) உங்களுடைய சந்தேகங்களுக்கு என்னால் முடிந்தளவு விளக்கங்களைத் தரமுடியும் என் எண்ணுகின்றேன். தொடர்ந்து உங்களது ஆதரவினை எதிர்பார்த்து இந்த அறிமுகத்தினை நிறைவு செய்கின்றேன்.

சிறுகதைகளுக்காக வரையப்பட்ட ஓவியங்களில் ஒன்று
நான் ஒரு ஓவியன், முகாமைத்துவப் பட்டதாரி, கடந்த எட்டு ஆண்டுகளாக நான் ஒரு தொழில் முறைக் கணினி வடிவமைப்பாளன். எனது இந்தப் பயணங்களின்போது பல புதிய உத்திகளையும் நுட்பங்களையும் அனுபவத்தில் கற்றுக்கொண்டதாக உணர்கின்றேன். இதே போன்று இத்துறையில் உள்ள ஆர்வலர்களுடன் எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் இப் புதிய முயற்சியில் இறங்கியுள்ளேன். எனது திறமைக்கும் முயற்சிக்குமான உங்கள் ஆதரவு என்னை ஊக்குவிக்கும் என நம்புகிறேன். மொத்தத்தில் எனது 15 ஆண்டுகால கலை அனுபவத்தில் நான் மூழ்கி எடுத்த முத்துக்கள், உட்கிடையான நுட்பங்கள் எனப் பலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாக உள்ளேன். எனது இந்த சிறு அறிமுகத்தில் எனது சுய சரிதையினை அதிகம் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.
எனது அனுபவங்களின் மூலமாக நான் பெற்றுக்கொண்ட நுட்பங்களினையும் சில படிமுறைகளினையும் எனது பதிவுகளில் பதிவிடுகின்றேன். அவை உங்களைக் கவர்ந்தால் அல்லது ஏதோ ஒருவகையில் உங்களுக்கு உதவியாக இருந்தால் என்னை மென் மேலும் எழுதத் தூண்டும் என எண்ணுகிறேன். கணினி வடிவமைப்பு சம்பந்தமாக எந்தவொரு மென்பொருளாயினும் சரி (Adobe Photoshop, Adobe Indesign, Adobe Illustrator, Adobe Pagemaker, Corel Draw, QuarkXpress) உங்களுடைய சந்தேகங்களுக்கு என்னால் முடிந்தளவு விளக்கங்களைத் தரமுடியும் என் எண்ணுகின்றேன். தொடர்ந்து உங்களது ஆதரவினை எதிர்பார்த்து இந்த அறிமுகத்தினை நிறைவு செய்கின்றேன்.

சிறுகதைகளுக்காக வரையப்பட்ட ஓவியங்களில் ஒன்று
நிசா
Subscribe to:
Posts (Atom)












